Reshma R J
Quote by Reshma R J - ஒரு பேருந்து காதல்...

அந்தி சாயும் நேரம்... அந்த பேருந்தின் ஜன்னலோர இருக்கையில் நான்...

அவள் அங்கே நின்று கொண்டிருந்தாள்..
மை வைக்காத விழிகள்..
சாயம் பூசாத உதடுகள்...
அதன் வேலையை சரியாய் செய்து கொண்டிருக்கும் துப்பட்டா....

யார் சொன்னது மை வைத்த விழிகள் மயக்கும் என...

இதோ சோர்வோடு பேருந்து கம்பியில் சாய்ந்து தூக்க கலக்கத்தில் இருக்கும் அவள் விழிகள் தருகிறது ஒரு அழகான போதை..

அடிக்கடி வியர்வை துடைக்கும் கைகள் சொல்கிறது கவிதை....

சரியாய் 33 நிமிடங்கள்.... இறங்கி சென்று விட்டாள்...

யாரோ எவளோ... ரசித்தேன்... நிச்சயம் தப்பான ரசனை இல்லை....

நான் ரசித்த கவிதைகளில் அவள் ஒருத்தி....


RESHMAPRATHEESH - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments

Comments

You may like